"கொரோனா காலத்தில் புதிய வடிவத்தில் தன்னார்வலர் சேவை " : பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடு முழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடு முழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமது சொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்தது மூலமாக ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெகுவாக பாராட்டி உள்ளார். காணொலி மூலம், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, இடர்பாடான காலகட்டத்தில், வெளியே வந்து பணியாற்றியவர்கள் தங்களுடைய கடமையில் மட்டுமல்ல, மாறாக மிகப்பெரிய அச்சம் நிலவும் இந்த சூழ்நிலையில், தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் என பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர், காசியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story