களைகட்டும் ஆன்லைன் ஆடு விற்பனை - ஊரடங்கு நேரத்தில் மாற்று சிந்தனையில் சந்தை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் ஆடு வியாபாரம் களைகட்டியுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் ஆடு வியாபாரம் களைகட்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக சந்தைகள் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பக்ரீத் பண்டிகையை நம்பி ஆடு வளர்த்த வியாபாரி ஒருவர், இதற்கென பிரத்யேக வாட்ஸ்ஆப் குழுவை ஆரம்பித்துள்ளார். அதில், ஆடுகளின் படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு அதனுடன் விலையையும் கூறிவிடுகிறார். பிடித்திருப்போர், தகவலைக் கூறி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். ஊரடங்கு நேரத்தில், ஆடுகளை விற்பதும் வாங்குவதும் பயனுள்ளதாக இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story