கனமழையில் மிதக்கும் மும்பை- பல பகுதிகள் துண்டிப்பு

மும்பையில், தொடர் கனமழை காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கனமழையில் மிதக்கும் மும்பை- பல பகுதிகள் துண்டிப்பு
x
மும்பையில், தொடர் கனமழை காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால்,  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.  ஹிண்ட்மாதா, கிங் சர்க்கிள், சியோன் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.   மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்தில் 170 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.  நேற்று பல இடங்களில் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்தது.  ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், கனமழை தொடரும் என  வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்