1000 படுக்கைகளுடன் பிரமாண்ட மருத்துவமனை - உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
டெல்லியில், ஆயிரம் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர்.
டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு சொந்தமான இடத்தில், 250 ஐசியூ படுக்கை வசதிகளுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்துடன் இணைந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த மருத்துவமனையை 11 நாட்களில் உருவாக்கியுள்ளது. டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதுவரை 15 ஆயிரத்து 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் 5 ஆயிரத்து 300 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story