கேரளாவில் ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்வு

கேரளாவில் 240 பேருக்கு புதிதாக தொற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி -  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்வு
x
கேரளாவில் 240 பேருக்கு புதிதாக தொற்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 152 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  209 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளதாகவும்,  இரண்டாயிரத்து 129 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.  கேரளாவில் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 204 ஆக  உயர்ந்துள்ளதாகவும், தற்போது 135  ஹாட்ஸ் பாட்கள்   கேரளாவில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Next Story

மேலும் செய்திகள்