கோஷ்டி மோதல் தகராறு: பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் ரவுடிகள்- வெளியான சிசிடிவி காட்சியால் மீண்டும் பரபரப்பு

புதுச்சேரி அருகே கோஷ்டி மோதலில், 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி உள்ளது.
x
புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும், வழுதாவூர் பகுதியை சேர்ந்த முரளிக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு முரளி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் புதுநகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அருண் தரப்பினர் முரளி மற்றும் அவருடன் வந்தவர்களை கட்டை மற்றும் கற்களால் தாக்கி உள்ளனர். இந்த மோதலில் முரளி மற்றும் அவரது நண்பர் சந்துரு இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்திய வில்லியனூர் போலீசார்,10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட ரவுடிகள் கையில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த ​வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

//////////////////////////////////////////

Next Story

மேலும் செய்திகள்