சபரிமலையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு இடைக்காலத்தடை

பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது.
சபரிமலையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு இடைக்காலத்தடை
x
பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தும்  அதிகாரம் பத்தணந்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப் பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு  2 ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவுள்ள செறுவள்ளி எஸ்டேட் கையகப் படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த எஸ்டேட் சார்பாக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றமன்றம், கேரள அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்