இன்று 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்தநாக் மாவட்டத்தி​ல் உள்ள வாகமாவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - 24 மணி நேரத்தில்  5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்தநாக் மாவட்டத்தி​ல் உள்ள வாகமாவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுவன், சி.ஆர்.பி.எப். வீரரை கொன்றவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 3 பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு போலீஸ், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்ததாகவும், இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ​ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த  தாக்குதலில், ஜே.கே.ஐ.எப். கமாண்டர் ஜாகீத் தர் தப்பிவிட்டதாக தெரிவித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்