அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை - 8 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன பண ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அகமது படேல் வீட்டில் சுமார் 8 மணி நேரமாக கேள்விகளை எழுப்பி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின் புறப்பட்டுச் சென்றனர். கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி அகமது படேல் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அதிகாரிகள் வீட்டிற்கே சென்று வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
Next Story