சீன ஆக்கிரமிப்பு - அகற்றப்போவது எப்போது? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சீன ஆக்கிரமிப்பை எப்படி, மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என்றும் கூறியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ 20 லட்சம் பெற்றது உண்மைதான் என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டதாகவும், இதில் என்ன தவறு என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story