சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை
x
இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு கடந்த 15 ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது சொந்த ஊரான சூர்யா பேட்டையில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அம்மாநில முதல்வர் சந்தோஷ் பாபுவின் சொந்த ஊரான சூர்யா பேட்டையில் அவரது உருவச் சிலை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். சூர்யா பேட்டை பேருந்து நிலையம் அருகே  விரைவில் சிலை  நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்