ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாள்தோறும் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை தேவஸ்தனம் அனுமதித்தது.
ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாள்தோறும் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டாம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை தேவஸ்தனம் அனுமதித்தது. இதனை அடுத்து 11ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து நாளை முதல் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். ஜூன் 30 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்