பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் - 2021, மார்ச் 31ந் தேதி வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் - 2021, மார்ச் 31ந் தேதி வரை நீட்டிப்பு
x
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 2019-20ம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்