இந்தியாவில் 24. 70 கோடி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு - யுனிசெப் நிறுவனம் அறிக்கை
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை இதுவரை 14 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் 24 கோடியே 70 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story