பச்சிளம் குழந்தையை தரையில் அடித்த தந்தை - படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதி

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலியில் வசித்து வருபவர் ஷைஜு தாமஸ் நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பச்சிளம் குழந்தையை தரையில் அடித்த தந்தை - படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதி
x
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலியில் வசித்து வருபவர் ஷைஜு தாமஸ், நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 54 நாட்கள் கொண்ட பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் பிறப்பில் சந்தேகமடைந்த தாமஸ், மனைவியிடம் இருந்து  குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கி தரையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தாமஸை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்