காஷ்மீரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
x
காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில்,  3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாடிபல் என்ற பகுதியில் 
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்பட 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்