லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் - பிரதமர் மோடி, முதலமைச்சர் இரங்கல்
லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று இருந்தார். அப்போது லடாக் பகுதியில் வீர மரணமடைந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார். இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சீன ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். வீரமரணம் எய்திய பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story

