கொரோனா - உலகில் 6-வது இடத்தில் இந்தியா : கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு 2,36,657 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 ஆக உயர்ந்ததை தொடர்ந்து, உலக அளவிலான பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்,இந்தியா 6-வது இடத்துக்கு சென்றுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி புதிதாக 9 ஆயிரத்து 887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 294 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 58 பேரும், குஜராத்தில் 35 பேரும், தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 12 பேரும், மேற்குவங்காளத்தில் 11 பேரும், உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story