திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் தயார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆந்திர போக்குவரத்து கழகம் தீவிரமாக செய்து வருகிறது.
கொரோனா ஊரடங்கையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக கோயிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில் வரும் 8 ந்தேதி முதல் மீண்டும் திருமலைக்கு பக்தர்களை ஏற்றி செல்வதற்காக ஆந்திர அரசு பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராக உள்ளன. சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க நடத்துனர், ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story