மூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - "6 லட்சம் ஆலோசனைகள்"

மூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - 6 லட்சம் ஆலோசனைகள்
x
மூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவலை  கட்டுப்படுத்த உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் எல்லைகளை டெல்லி அரசு மூடி வைத்துள்ளது. இதனிடையே டெல்லி மருத்துவமனைகளின் சிகிச்சை தொடர்பாகவும்,   அண்டை மாநிலங்களின் மூடப்பட்ட எல்லைகளை திறப்பது தொடர்பாகவும் மின்னஞ்சல் முகவரியிலோ, 1031 என்ற எண்ணிலோ வெள்ளிக்கிழமைக்குள் ஆலோசனைகளை  தெரிவிக்க, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் 6 லட்சம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்