குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்
x
மக்களுக்கு இடையூறு இன்றி மாதம்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமாக செலுத்தும்படி புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று, புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயேன், மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு   நாராயணசாமி தரப்பு வாதத்தை அவரது வழக்கறிஞர் எடுத்து வைத்தார். தொடர்ந்து ஆஜரான, மத்திய அரசு வழக்கறிஞர்,  கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு அரிசியே வழங்க ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிவி​த்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 23-க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்