முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு : குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே. பாலன் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு : குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
x
கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில், 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம், 2007 ல் தீர்ப்பு வழங்கியது. இதைஎதிர்த்து, பூங்காநகர் மாணிக்கம், செல்வம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீது இருவேறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.  வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பூங்காநகர் மாணிக்கம், செல்வம் உள்ளிட்டோருக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்ய நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என ஆணையிட்டுள்ளனர். தண்டனை குற்றவாளிகளுக்கு ஏதேனும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தால், அதை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்