புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு தொற்று உறுதி - மக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத் துறை வேண்டுகோள்

புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு தொற்று உறுதி - மக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத் துறை வேண்டுகோள்
x
புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே புதுச்சேரியில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆகவும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆகவும் உயர்ந்துள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 33 பேராக அதிகரித்துள்ளது.தற்போது காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என  சுகாதாரத்துறை இயக்குநர்  மோகன்குமார்  தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்