பிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு
டெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.
டெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு புறப்படும் அவர், பிற்பகல் ஒரு மணியளவில் டெல்லி சென்றடைகிறார். பின்னர், மத்திய நீர்வளத் துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார். அதன் பிறகு பிரதமர் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, ஆந்திராவிற்கு, கொரோனா நிவாரணம், விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு விபத்து, விசாகப்பட்டணத்தை தலைநகராக மாற்றுவது மற்றும் திருப்பதி கோவில் திறப்பது குறித்து, ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. ஊரடங்கு சமயத்தில் மாநில முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
Next Story