"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முதலாமாண்டு இன்றுடன் நிறைவடைவதையொட்டி, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி முன்னணியில் நின்று அரசை சிறப்பாக வழிநடத்தி செல்வதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின்கீழ் சுயசார்பு பாரதத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் இந்தியாவில் கொரோனவைரஸ் கட்டுக்குள் இருப்பதற்கு மோடியின் செயல்பாடே காரணம் என்றும் நட்டா கூறினார்.
Next Story