வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்க சென்ற வனத்துறையினர் - வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுத்தை
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள ராஜகொண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க சுருக்கு வலை விரித்து வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள ராஜகொண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க சுருக்கு வலை விரித்து வைத்துள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைப் புலி ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.
விவசாயி அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தை புலியை வலையில் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று வலையில் இருந்து தப்பிய சிறுத்தை வனத்துறை அதிகாரிகள் 2 பேர் மீது பாய்ந்து அவர்களை தாக்கி காயப்படுத்திவிட்டு ஓடிவிட்டது.
காயமடைந்த வனத்துறை அதிகாரிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், புதர் ஒன்றில் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறையினர், அதனை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Next Story