ஊரடங்கு காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாராட்டு - கதாநாயகர்கள் என்று டெல்லி முதலமைச்சர் புகழாரம்
டெல்லியில் ஊரடங்கு காலத்தில் இரவு பகல் பாராமல் உயிரை துச்சமென மதித்து பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள்,காவல்துறையினர் உள்ளிட்டோரே கதாநாயகர்கள் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் ஊரடங்கு காலத்தில் இரவு பகல் பாராமல் உயிரை துச்சமென மதித்து பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரே கதாநாயகர்கள் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டியுள்ளார். அவர்களின் கடும் உழைப்பினால் தான் கொரோனாவுக்கு எதிராக டெல்லி தீவிரமாக போராடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண முகாம்களில் நாள்தோறும் 10 லட்சம் பேரின் பசியை போக்கும் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து பணியாளர்களையும் டெல்லி வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண முகாம்களில் நாள்தோறும் 10 லட்சம் பேரின் பசியை போக்கும் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து பணியாளர்களையும் டெல்லி வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story