தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

தெலுங்கானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன், 12 மணி நேர போராட்டத்திற்குப்பின் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
x
தெலங்கானா மாநிலம் போச்சனபள்ளி என்கிற கிராமத்தில் விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்த  சாய் என்கிற  3 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சிறுவன் சாய்,  25 அடி ஆழத்தில் இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,  முதற்கட்ட முயற்சியின்போது, மண்சரிவு காரணமாக மேலும் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் சுவாசிப்பதற்கு ஏற்ப ஆக்சிஜன் குழாய் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பக்கவாட்டு பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நள்ளிரவிலும் நடைபெற்றது. சிறுவனை மீட்க ஹைதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போச்சனபள்ளிக்கு விரைந்தனர். சுமார்12 மணி நேரம் நீடித்த போராட்டம் பலனளிக்காமல், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

Next Story

மேலும் செய்திகள்