ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
x
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வேல் பகுதியில் மக்கள் குறை கேட்கும் மண்டபம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக வெடித்தது. அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்