புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களுடன் ஆலோசனை - கட்டமைப்பு திட்டங்களை தொடர நிதியமைச்சர் வேண்டுகோள்

புதிய வளர்ச்சி வங்கியின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களுடன் ஆலோசனை - கட்டமைப்பு திட்டங்களை தொடர நிதியமைச்சர் வேண்டுகோள்
x
புதிய வளர்ச்சி வங்கியின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார். அந்த வங்கியின் ஆளுநர்களுடன், காணொளி காட்சி மூலம் நடைபெற்ற சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் அதனைத் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும், உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு  புதிய வளர்ச்சி வங்கியின் பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. பிரிக்ஸ் நாடுகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 55 திட்டங்களை செயல்படுத்த புதிய வளர்ச்சி வங்கி முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்