பீகார் ரயில் நிலையத்தில் பசியால் உயிரிழந்த தாய் - சடலத்தை மூடிய போர்வையை எடுத்து விளையாடிய குழந்தை

சொந்த ஊருக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம் என குஜராத்தில் இருந்து ரயில் பிடித்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் புறப்பட்டு உள்ளார்.
பீகார் ரயில் நிலையத்தில் பசியால் உயிரிழந்த தாய் - சடலத்தை மூடிய போர்வையை எடுத்து விளையாடிய குழந்தை
x
சொந்த ஊருக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம் என குஜராத்தில் இருந்து ரயில் பிடித்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு 2 வயது குழந்தையுடன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு  பெண் புறப்பட்டு உள்ளார். ரயில் திங்கள் இரவு மூசாபர்பூர் ரயில் நிலையத்தை அடையும் முன் அந்த பெண் உயிர் பிரிந்துள்ளது. பசி, வெப்பம் தாங்காமல் உயிரிழந்தஅந்த பெண்ணின் சடலம், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் போர்வையால் மூடப்பட்டு இருந்த நிலையில், தாய் இறந்தது அறியாத குழந்தை அந்த போர்வையை எடுத்து விளையாடிய  காட்சி, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய மற்றொரு புலம் பெயர் தொழிலாளியின் 2 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்