எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
x
எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை திரும்ப அழைத்துள்ள சீனா, இந்திய எல்லையில் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சீன ராணுவத்தின் அத்துமீறலை முறியடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்