"வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் 7 நாட்கள் விடுதிகளில் தனிமை படுத்தினால் போதும்" - மத்திய அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை 7 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் 7 நாட்கள் விடுதிகளில் தனிமை படுத்தினால் போதும் - மத்திய அரசு அறிவிப்பு
x
விமானம் மூலம் இந்தியா திரும்பும் பயணிகள், ஏழு நாட்கள் தனியார் விடுதிகளிலும் மீதம் 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பயணிகள் தனியார் விடுதிகளில் 14 நாட்கள் தங்குவதற்கு உண்டான தொகை பயணிகளிடம் இருந்து முன்கூட்டியே வசூலிக்கப்படுகிறது. தற்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள ஏழு நாட்களுக்கான தொகையை தனியார் விடுதி நிர்வாகங்கள் பயணிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் ஹோட்டல் மற்றும் தனியார் விடுதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்