கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை

கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.
கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை
x
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் தன் மனைவி உத்ராவை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்த கணவர், பாம்பை விற்றவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ள நிலையில் அது சூரஜ் வீட்டில் இருந்தது. ஆனால்  அந்த குழந்தையை பெண் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தையை உத்ராவின் தந்தை சூரஜ் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது குழந்தையின் அத்தை அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைந்து கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பார்ப்போரின் நெஞ்சத்தை பதற வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்