உள்மாவட்ட பேருந்து போக்குவரத்து தொடக்கம்

கேரளா மற்றும் புதுச்சேரியில் உள்மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில், அரசு பணியாளர்களுக்காக பேருந்து இயக்கப்பட்டது.
உள்மாவட்ட பேருந்து போக்குவரத்து தொடக்கம்
x
கேரளா

கேரளாவில் உள்மாவட்டங்களுக்குள், கடும் கட்டுப்பாடுகளுடன், பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. பயணிகள் பின் கதவு வழியாக உள்ளே சென்று, முன் கதவு வழியாக இறங்க வேண்டும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


புதுச்சேரி

இதேபோல், புதுச்சேரியிலும் உள்ளூர் பேருந்துகள் குறைந்த அளவில், கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவும், கட்டாயமாக முக கவசம் அணிந்து பயணம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கட்டாயமாக கையுறை மற்றும் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம்

இதனிடையே, அரசுப் பணியாளர்கள் பணிக்கு செல்ல, காஞ்சிபுரம் பணிமனைகளில் இருந்து பேருந்து இயங்க தொடங்கியது. காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனையில் இருந்து 12 பேருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனையில் இருந்து 13 பேருந்து என 25 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்