57 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சிறுமி - மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையில் அமர வைத்து கெளரவித்தார்

புதுச்சேரி தேங்காய்திட்டை சேர்ந்த வெள்ளையன்- வித்யா தம்பதியின் மகள் தியா 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
57 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சிறுமி - மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையில் அமர வைத்து கெளரவித்தார்
x
புதுச்சேரி தேங்காய்திட்டை சேர்ந்த வெள்ளையன்- வித்யா தம்பதியின் மகள் தியா, 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மடிகணினி வாங்குவதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட  தொழிலாளர்களுக்கு அந்தத் தொகையை வழங்க  தியா முன்வந்தார். உண்டியலில் இருந்த 24 ஆயிரத்து 347 ரூபாய் மூலம் நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, பிஸ்கெட் வாங்கி கொடுத்தார்.  இதையறிந்த மாவட்ட ஆட்சியர் அருண், தியா மற்றும் அவரது பெற்றோரை அழைத்து பாராட்டினார். மேலும் தியாவை தனது இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் ஊக்கப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்