கொரோனா சமூக பரவலா? - தொடங்குகிறது ஆராய்ச்சி
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தியாவில் 21 மாநிலங்களில் 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வை நடத்துகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story