கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? - அறிய உதவும் 'குரல்வழி சேவை' தொலை பேசி எண் அறிமுகம் - 94999 12345- ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்
கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய 'குரல் வழி சேவை' அவசர உதவி தொலை பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையை, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை, தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
24 மணி நேரமும் செயல்படும் இந்த குரல்வழி சேவை தொலைபேசி எண் 94999 12345- மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
Next Story