பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்
புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர். திருபுவனை அருகே உள்ள பள்ளிநேலியனூர் பகுதியை சேர்ந்த பல தன்னார்வ இளைஞர்கள் மாணவர்களுக்கு முடி திருத்த முன்வந்துள்ளனர். சமூக இடைவெளியில் சிறுவர்களை அமர வைத்து, தலைமுடிகளை வெட்டி அழகு பார்த்து வருகிறார்கள். இதனை அப்பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.
Next Story