கொரோனா வைரஸ் எதிர்ப்பு போர் : டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
x
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து இரவு 9 மணிக்கு, நாடு முழுவதும் பல இடங்களில் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்த பொதுமக்கள், அகல் விளக்கு, மெழுகுவர்த்தி உள்ளிட்டவை மூலம், ஒளி ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி தனது டெல்லி இல்லத்தில் விளக்கேற்றினார். 


Next Story

மேலும் செய்திகள்