முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை : காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

கொரனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி, நாளை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்
முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை : காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்
x
அந்த வகையில் இந்த கலந்துரையாடலில், பீகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஹரியானா, மகாராஷ்டிரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக இணைய உள்ளார். கொரனா வைரஸின் தாக்கம் எந்தளவில் உள்ளது ? அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் கேட்டறிகிறார். மாநிலத்தின் தற்போதய நிலவரம் குறித்து பேச ஒவ்வொரு முதல்வருக்கும் 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனையின் போது சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், தலைமைச் செயலாளர்,  உள்துறை செயலாளர், உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்