புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரட​ங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரட​ங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடையுத்தரவு போடப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளதாக தெரிவித்தார். வரும் 31ஆம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகளும் மூடி இருக்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே, மது பார்கள் மூடப்பட்டிருந்த நிலையில், வரும் 31ஆம் தேதி வரை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளும் மூடப்படும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்