மணிப்பூர் சிறுமி மீது இனவெறி தாக்குதல் : மர்ம நபரை கைதுசெய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு
டெல்லியில் மணிப்பூர் சிறுமி மீது, இன வெறியுடன் நடந்துகொண்ட நபரை கண்டறிந்து, கைதுசெய்ய காவல்துறைக்கு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் மணிப்பூர் சிறுமி மீது, இன வெறியுடன் நடந்துகொண்ட நபரை கண்டறிந்து, கைதுசெய்ய காவல்துறைக்கு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். விஜய்நகரில் மணிப்பூரை சேர்ந்த சிறுமி மீது மர்மநபர் ஒருவர் எச்சிலை உமிழ்ந்துவிட்டு, "கொரோனா" என்று கூச்சலிட்டவாறு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒரு தேசமாக ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Next Story