அரசு, தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தம்: புதுச்சேரிக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

புதுச்சேரியில், நேற்று இரவு 9 மணி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தம்: புதுச்சேரிக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
x
புதுச்சேரியில், நேற்று இரவு 9 மணி முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர்- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் முற்ளோடை என்ற இடத்தில் புதுவை போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் புதுச்சேரியிலிருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் விழுப்புரம் வழியாக செல்கின்றன. மேலும் சரக்கு வாகனங்கள் புதுவை நகருக்கு சரக்கு எடுத்து வந்த வாகனங்களாக இருந்தால் அந்த வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட எந்த ஒரு பதிவு எண் கொண்ட வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்பட வில்லை. 

Next Story

மேலும் செய்திகள்