"புதுச்சேரியில் 23ம் தேதி முதல் 144 தடை உத்தரவு" - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 23ம் தேதி முதல் 144 தடை உத்தரவு - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
x
புதுச்சேரியில் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 31 ஆம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் என தெரிவித்தார். இந்த குறிப்பிட்ட நாட்களில், 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என கூறிய அவர், அந்த நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணிவரையிலும்,  மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்