கேரளாவில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு

கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு
x
கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்தை சேர்ந்த  5 பேருக்கும் துபாயிலிருந்து காசர்கோடு வந்த இருவர் உட்பட 6 பேருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாலக்காடு வந்த ஒருவருக்கும் கொரோனா  இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் கூறினார். இதுபோல, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 எம்எல்ஏ-க்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள் சென்றுள்ளதாக கூறிய பினராயி விஜயன், காசர்கோடு பகுதியில் அனாதை இல்லங்கள் அலுவலகங்களை 2 வாரம் மூட உத்தரவிட்டுள்ளதாகவும், கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் கூறினார்.  கேரளாவில் தற்போது 44, ஆயிரத்து 390 பேர்  கண்காணிப்பில் உள்ளதாகவும், இவர்களில் 225 பேர், மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும்  தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்