பால் பாக்கெட்டுகளில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் - புதுச்சேரி அரசின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

பால் பாக்கெட் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுச்சேரி அரசுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
பால் பாக்கெட்டுகளில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் - புதுச்சேரி அரசின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு
x
பால் பாக்கெட் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுச்சேரி அரசுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. பால் பாக்கெட்டில் அச்சிட்டுள்ள விளம்பரத்தில், சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவமனை செல்லுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிவது, கொரோனா தொற்று அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட வாசகம் இடம்பெற்றுள்ளது. காலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பால் பாக்கெட்டுகளும், மாலையில்70 ஆயிரம் பால் பாக்கெட்டுகளும் வினியோகமாகிறது.

Next Story

மேலும் செய்திகள்