கொரோனா அச்சம் : ஏழுமலையான் கோயில் மூடப்படலாம்- ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர் கருத்து
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகை அச்சுறுத்தும் கொரோனாவை தடுக்க, கோயிலை மூட ஆகம விதியில் வழி உள்ளதாக கூறினார். எனவே நாங்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க, உலக நன்மைக்காக வேண்டுவதாகவும் கூறினார். பக்தர்கள், அவரவர் இல்லத்தில் இருந்தபடியே ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, ஏழுமலையான் கோயில் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story