வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா - மத்திய அரசு
வெளிநாடுகளில் வசித்து வரும் 276 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசித்து வரும் 276 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரானில் 255 பேருக்கு, கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில்12 பேரும், இத்தாலியில் 5 பேருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை, ஹாங்காங், குவைத் மற்றும் ரூவாண்டாவில் தலா ஒருவருக்கு, கொரோனா பதிப்பு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story