முகத்தை சிதைத்து பெண்ணை கொன்ற கொடூரம் - டிஷா கொலை வழக்கை போல மீண்டும் ஒரு சம்பவம்

தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொன்ற கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்...
முகத்தை சிதைத்து பெண்ணை கொன்ற கொடூரம் - டிஷா கொலை வழக்கை போல மீண்டும் ஒரு சம்பவம்
x
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொன்று எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது அதே பாணியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

அதுவும் டிஷாவை கொன்றது போலவே இப்போது ஒரு பெண்ணை கொடூரமாக கொன்று வீசியிருக்கிறார்கள். ரங்காரெட்டி மாவட்டம் தங்கடபள்ளியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு கீழ் ஆடையின்றி ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆடையின்றி கிடந்த பெண்ணின் சடலத்தையும், முகம் சிதைந்த நிலையில் கிடந்த கோலத்தை பார்த்தும் அதிர்ச்சியடைந்தனர். டிஷா கொலை வழக்கில் பாலியல் வன்முறை செய்து எரித்துக் கொன்றதை போல இதில் அடையாளத்தை மறைக்க முகத்தை சிதைத்து விட்டு சென்றிருப்பது பயங்கரம்... 

ஆனால் பாலியல் வன்முறை செய்து கொல்வதே அவர்களின் நோக்கம்  என்பதை நிரூபிக்கும் விதமாக உடலில் இருந்த நகைகளை அப்படியே விட்டு சென்றிருக்கிறது கொலை கும்பல். பெண்ணின் சடலத்தில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்ளிட்ட நகைகள் அனைத்தும் அப்படியே இருப்பதோடு, அவர் அணிந்து வந்த ஆடைகள் இல்லாததாலும், முகம் சிதைந்திருப்பதாலும் அவர் யார்? என்பதை கண்டறிய முடியாத குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

டிஷா கொலை வழக்கு அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத சூழலில் இப்போது மீண்டும் அதே பாணியிலான ஒரு கொலை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரம் பெண்ணை கடத்தி வந்து கொன்ற கொலையாளிகளை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து வரும் போலீசார், கொலையான பெண் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

என்கவுன்ட்டர் நடந்த பிறகும் மீண்டும் ஒரு சம்பவம் அதே பாணியில் அரங்கேறியிருப்பதால் தெலங்கானா மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்